மழையொளி - ரா ப ஈ (RBE)

காற்றோடையின் அலை செலுத்தும் கார்மேக கலங்கள் சில,

கரு நீல வான்வெளியில் உருவங்கள் பல கொண்டு;

களிப்போடு சென்றனவே கண்டயிடம் விதியின்றி!

கதிரவனின் கண்கட்டி, உதிரி மலர் மழை தூவி;

சென்ற இடம் செழிப்பாக எங்கும் துளி மணியாக!

மங்கிய கரும் சூழலிலும் மண்ணில் விதையின் முகம் துளிர..

துளிர் இலையில் துளி வழியும் அழகதையும் கண்டிடவே,

கண்கட்டை கலைத்திங்கு  கதிரொளியும் வீசியதோ!?

துளி வழியே ஒளி தழுவி ஒன்றிணைய- கருமுகிலும்

நாணமுற்ற வானில் பல வண்ணம் தோன்ற  விலகியதோ!?


- ரா ப ஈ (RBE)




Comments

Popular Posts